சிவில் யுத்தமொன்று நாட்டுக்குள் உருவாவதற்கு இடமளிக்கப்படாதென வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் யுவான் குவைடோ தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோ தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்கப்படுமென அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல அறிவித்துள்ளன. இதேவேளை வெனிசுலா ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகளவான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் மோதல் நிலை உக்கிரமடைந்து வருவதாக வெனிசுலா செய்திகள் தெரிவிக்கின்றன.