தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மலையக தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிக்க இணக்கப்பாடு வெளியிடப்பட்டது. எனினும் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.