இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகிய நிலையில் நாணய சுழற்சியில் வென்ற ஆஸி அணி தனது முதலாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.ஜோ பேன்ஸ் 180 ஓட்டங்களையும் ட்ரெவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும் குர்திஸ் பெட்டேசன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கை அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.லஹிரு திரிமான்ன 41 ஓட்டங்களை பெற்று கொடுத்ததோடு 46 ஓட்ட பெற்ற நிலையில் திமுத் கருணாரத்ன உபாதை காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.ஸ்டார்க கமின்ஸ் லியோன் ஆகியோர் தலா 1 விக்கட்டினை வீழ்த்தினர்.