காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
65 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின் உடலம் கரையொதுங்கியுள்ளது.இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என தெரிய வருகிற அதேநேரம் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பொலிஸார் மேலததிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.