இலங்கையில் பதிவாகும் மரணங்களில் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2 ம் இடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புற்றுநோயிலிருந்து மக்களை காப்பாற்றும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமை உலக புற்றுநோய் தினமாகும். இவ்வருடம் முதல் 2021ம் ஆண்டு வரை ‘ நான் செயற்படுவேன் – இன்றுபோல் நாளையும்’ எனும் தொனிப்பொருளில் உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையிலும் பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.