தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோத அறுவை சிகிச்சை செய்த மருத்துவ உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் 9 இலட்சம் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. உரிய தகைமையின்றி மருத்து சத்திர சிகிச்சையில் ஈடுபட்டதாக மருத்துவ உதவியாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலையின் உரிமைளாரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.