கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்ட விமான நிலையத்திற்குள் பல்வேறு நிலையங்கள் அமைக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளை வழிகாட்டும் அறிவித்தல் பலகை, வர்ண சமிஞ்சைகள் போன்றவையும் தேவையான இடங்களில் பொருத்தப்படுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.