யாழ் நாவந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் மற்றும் கஞ்சா தொகையை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.