கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. மன்னார் முதல் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக, பலப்பிட்டி வரையும், மாத்தறையிலிருந்து, ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையும் இவ்வாறு காற்று அதிகரித்து வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களோடு இணைந்துகொள்கிறார் வளிமண்டலவியல் திணைக்கத்தின் கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன்.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.
படிக்க 0 நிமிடங்கள்