மாலி இராச்சியத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கான இழப்பீட்டு திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஐ.நா உறுதியளித்துள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலி இராச்சியத்தில் இலங்கை இராணுவத்தினர் உட்பட ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் கடமையாற்றிய இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் அமைதிப்படையில் கடமையாற்றிய இலங்கை வீரர்கள் இருவர் பலியாகினர்.