அமெரிக்காவுடன் சிறந்த மற்றும் அமைதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்குமிடையில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற சந்திப்புக்கமைய புதிய இருதரப்பு உறவை மேம்படுத்த வடகொரியா எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வடகொரியா தூதுவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அணுவாயுத தயாரிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை கைவிடவுள்ளதுடன் குறித்த முயற்சிக்கு அமெரிக்கா நம்பகமான முறையில் பதிலளிக்குமாயின் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவு சிறப்பாகவும் விரைவாகவும் வலுவடையுமென அவர் தெரிவித்துள்ளார்.