திருத்தப்பணி காரணமாக 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மஹரகம மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம,பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்.சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரையான 24 மணிநேர நீர் விநியோகத் தடை இடம்பெறுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.