சிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ஜனாதிபதி எமர்ஷன் மனங்காக்வா சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயற்சித்த போது மோதல் உருவானது. பொலிஸார் மோசமான முறையில் செயற்பட்டதன் காரணமாக பொதுமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். இதேவேளை இரு தரப்பினருக்குமிடையிலான மோதலின் போது பலர் பலியாகியுள்ளதாக சிம்பாப்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.