சுற்றுச்சூழல் பரிந்துரைகளின் கீழ் மீன்பிடித்துறை ஏற்றுமதியாளர்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது. மொன்டேரோ பே எக்வேரின் சீவுட் வொச் வேலைத்திட்டத்தினூடாக இது தொடர்பான தெரிவு இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மீன் ஏற்றுமதியின் மூலம் 190 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டது. அது இலங்கையின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்ததாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுச்சூழல் பரிந்துரைகளின் கீழ் மீன்பிடித்துறை ஏற்றுமதியாளர்களில் முதற்தடவையாக இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. கடல்வள பேண்தகு பயன்பாட்டின்மூலம் மீன்பிடி தொழிற்துறையை கட்டியெழுப்புவதே பிரதான நோக்கமென இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.