நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உபாயமார்க்க மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு 17 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக எதிர்ப்பார்த்தோம். அதில் 95 வீத முன்னேற்றம் ஏற்பட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். நேரடி வெளிநாட்டு முதலீடாக 1.7 பில்லியன் டொலர் பெறப்பட்டது. அதை இவ்வருடம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். புதிய முதலீட்டு வலயத்திற்கு தேவையான உயர்ந்தபட்ச வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டுள்ளார்