2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வித்துறைக்காக 635 பில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறைக்காக 690 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களின் சுகாதாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது. கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்காகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.