பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிப்பெற்றுள்ளார். பிரிட்டன் எதிர்கட்சியான தொழிற்கட்சியினால் தெரேசா மேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. தொழிற்கட்சியின் உறுப்பினரான ஜெரமி கோபின் இந்த பிரேரணையை கொண்டு வந்தார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமருக்கு ஆதரவாக 325 வாக்குகளும் எதிராக 306 வாக்குகளும் வழங்கப்பட்டன. நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிப்பெற்றமையை தொடர்ந்து தெரேசா மே தனது கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக கூறினார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும், அதாவது பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே படு தோல்வியை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.