ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். விசேடமாக ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே 70 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சி கிடைக்கலாம். விசேடமாக கிழக்கு, ஊவா, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் ஹம்பாந்தோட்டை மன்னார் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட வானிலை நிலையம் அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் கடல் பகுதிகளில் கடும் காற்று வீசுகின்றது.