ஐரோப்பிய சங்கத்தில் இருந்து பிரிட்டனை வெளியேற்றும் பிரக்ஸிட் உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் தெரேசா மே படுதோல்வியடைந்துள்ளார். இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டர்க்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் பிரித்தானியா ஐரோப்பிய சங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். பிரக்ஸிட் உடன்படிக்கையை அமுல்படுத்த ஆதரவாக 202 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. இவ்வுடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு எதிராக 432 வாக்குகள் கிடைத்தன. இதன்படி தெரேசா மே 230 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளார். பிரித்தானியா பாராளுமன்ற வரலாற்றில் ஆளும் தரப்பு படுதோல்வியை சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வாக்கெடுப்பையடுத்து பிரித்தானிய எதிர்கட்சியான தொழில் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் போது பிரதமரின் அரசாங்கம் தோல்வியடைந்தால் பொது தேர்தல் ஒன்றை நடத்த வேண்டியுள்ளது.