மூடப்பட்டுள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் 4 பீடங்களும் இன்று திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் சிலர் கடந்த 28ம் திகதி முதல் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக நான்கு பீடங்களை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மாணவர்கள் சிலரின் வகுப்புத்தடையை நீக்குமாறும், மாணவர் நலன்புரி விடயங்களில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்குமாறும் வலியுறுத்தியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மூடப்பட்ட பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழ நிர்வாகம் அறிவித்துள்ளது.