இந்திய கால்ப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ஸ்டீவன் கொன்ஸ்டன்டயின் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். ஆசிய கிண்ண போட்டிகளில் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து அவர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு அவர் பயிற்றுவிப்பாளராக தெரிவானார். எனினும் அணியின் வீரர்களுடன் இணைந்து செயற்பட சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஸ்டீவன் கொன்ஸ்டன்டயின் தெரிவித்துள்ளார். இதேவேளை அவர் ஏற்கனவே 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இந்திய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.