வடகொரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இவ்வார இறுதிக்குள் பேச்சுவார்த்தை இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மாநாடு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கிடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. வடகொரிய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அது தொடர்பான கருத்துக்களும் பரிமாறிப்படுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.