பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர அரச இராசாயன பகுபாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரானார். முக்கிய பிரமுகர்கள் கொலை குற்றம் தொடர்பில் ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை குழுவின் பணிப்பாளர் நாமல் குமார என்பவர் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் ஆஜராகுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு அரச இராசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. முக்கிய பிரமுகர்கள் கொலை குற்றம் தொடர்பில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளில் பொலிஸ் மாஅதிபரின் குரல் உள்ளதா என்பதை ஆராய்வதே இவ்விசாரணையின் நோக்கமாகும். இதன்போது பொலிஸ் மாஅதிபரின் குரல் மாதிரியை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வலிஅங்கே தெரிவித்துள்ளார்.