அமெரிக்காவில் முடங்கியுள்ள அரச பணிகளை தற்காலிகமாக மீள ஆரம்பிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினரான செனட்டர் லின்ட்சே க்ரஹம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பிற்கு மிகவும் நெருங்கிய நண்பரான அவர், அமெரிக்காவின் அரச பணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று, அதனூடாக பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென செனட்டர் லின்ட்சே க்ரஹம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை முடங்கியுள்ள அரச பணிகளை தற்காலிகமாக ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.