ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்குலான மற்றும் மொரட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 9 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதானவர்கள் அங்குலானன மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.