இறப்பர் செய்கை இடம்பெறும் பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஸ்த்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் இறப்பர் உற்பத்தியை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் உற்பத்திக்கு அமைவாக இறப்பர் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிய செலாவணியை ஈட்டுதல், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கப்பெறுமென அமைச்சர் நவீன் திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.