ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சாந்த பண்டார இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இளைஞர் அணித் தலைவராக இவர் செயற்பட்டுவந்தார்.
முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.