9 வயது சிறுமியொருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கந்தேகெதர சார்ணியா தோட்டத்தில் மஹதென்ன பிரிவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமி அவரது வீட்டுக்கு அருகிலுள்ள மரக்கறி தோட்டத்தில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் சந்தேக நபர்களை கைதுசெய்தனர். 26 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தாய் தனது கணவனைப் பிரிந்து மற்றுமொரு நபருடன் பதுளை ஹாலிஎல பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகள் வேறொரு இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள நிலையில் அவரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன்போதே சிறுமி கடந்த வருடம் ஜனவரி மாதம் கொலைசெய்யப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அதற்கமைய புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.