மேலும் இரண்டு மீளெழுச்சி கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. ஹம்பாந்தோட்டை ஜூல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 149 வது மீளெழுச்சி கிராமம் மற்றும் அநுராதபுரம் கெப்பத்திக்கொல்லாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜயநெத்துக எனும் 150 வது மீளெழுச்சி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.