சீனாவின் சாங் இ – 4 விண்கலம் சந்திரனில் தரையிறக்கப்பட்டுள்ளது. சந்திரனின் இரண்டு பகுதியை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கில் முதன்முறையாக குறித்த விண்கலம் சீனாவினால் கடந்த 8ம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக பூமியை சுற்றிவந்த குறித்த விண்கலனம் கடந்த 12ம் திகதி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தது. அதற்கமைய சந்திரனில் இருண்ட பகுதியில் அதனை தரையிறக்குவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்கலத்தின் வட்டப்பாதை, நீள்வட்டப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. அதற்கமைய இன்றைய தினம் சந்திரனின் இருண்ட பகுதியில் சீனாவின் சாங் இ – 4 விண்கலம் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பூமியை சந்திரன் சுற்றிவருவதாலும், அது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் இரண்டும் ஒரே வேகத்தில் பயணிப்பதாலும் சந்திரனில் ஒரு பகுதியை மாத்திரமே பூமியிலிருந்து காண முடியும். அதன் மற்றொரு பகுதியை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலையில், அது இருண்ட பகுதியென அழைக்கப்படுகிறது. அந்த பகுதி குறித்து ஆய்வு செய்யவே சீனா முதன்முறையாக அங்கு விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.