பாதிக்கப்ட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்ட சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கும் வகையில் அவரது நலன்புரி விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபட்ட முப்படையினர், பொலிசார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புக்கள் உள்ளிட்ட சலக தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிக்காட்டலில் விசேட நிவாரண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்டு எடுக்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது அர்ப்பணிப்பினால் உயிர்ச்தேங்கள் மற்றும் சொத்து சேதங்களை குறைக்க முடிந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தமது சகோதர மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி மனிதாபிமான பணியாற்றிய சகல தரப்பினரின் சேவையையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.