கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதும் கிறிஸ்வர்களினால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது. நத்தார் தின பிரதான ஆராதனைகள் நிகழ்வு பரிசுத்த போப் பிரான்ஸில் தலைமையில் சென் பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தில் இடம்பெற்றது. அங்கு உலகம் பூராகவும் உள்ள கிறிஸ்தவ அடியார்களுக்கு அர்த்தபூர்மான நத்தார் பண்டிகையாக இது அமைய வேண்டுமென பிரார்த்தித்த பாபரசர் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உலகம் பூராகவும் உள்ள வறிய மற்றும் செல்வந்தவர்களுக்கு இடையில் காணப்படும் மிகப்பெரிய இடைவெளியை குறைப்பதற்கு இன்று முதல் திடசங்கற்பம் பூனவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். நத்தார் தேவ ஆராதனைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.