கொங்கோவில் இடம்பெற்ற இனமோதலில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். 71 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக கொங்கோவில் இனமோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொங்கோவில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.