வவுனியா – பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 330 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இன்றை தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்