சீதுவ லியனகேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. களியாட்ட நிகழ்வொன்றுக்கு வருகைதந்த நபரொருவருக்கும் அங்கு தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கும் இடையிலான மோதல் துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற வளாக உரிமையாளரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்
படிக்க 0 நிமிடங்கள்