வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.காலை எட்டு மணியை கடந்தும் வவனியாவில் உள்ள பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.அத்துடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியை எழுப்பிய படி செல்வதையும் அவதானிக்க முடிகிறது.ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககையும் பாதிக்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.