கடல் எல்லையை மீறி செயற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் பயணித்த படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்