மட்டக்களப்பு ஊரணி நாவற்கேணி பகுதியில் விசாரணைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றறொருவர் தலைமறைவாகியுள்ளார். நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணையொன்றிற்காக அப்பகுதிக்கு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றபோது மூவர் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொர்பில் அதேபகுதியைச் சேர்ந்த 24 வயது மற்றும் 30 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்