பேத்தாய் சூறாவளி காரணமாக வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நைனா தீவிற்கான யாத்திரை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவு வரை நாளாந்தம் இடம்பெறும் படகு சேவையும் நேற்றுமுதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பருத்தித்துறை பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் அதில் பயணித்த எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.