ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பங்களதேஷ் நாட்டு பெண்ணை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெஹியவளை, காலிவீதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த குறித்த பெண்ணொருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விசேட தகவலொன்றின் பெயரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது பங்களதேஷை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இரத்மலானை பகுதியில் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கிருந்து 31 கிலோ கிராம் அளவிலான ஹெரோயின் மீட்கப்பட்டது. இவற்றின் பெறுமதி 388 மில்லியன் ரூபாவென பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.