அரசியல் நெருக்கடி காணப்பட்ட போதிலும் பண்டிகை காலத்திற்கு தேவையான சகல பொருட்களும் எவ்வித பற்றாக்குறையுமின்றி தருவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது. இதனால் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்து பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாதென அதன் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவிக்கின்றார். பண்டிகை காலத்தில் பொருள் விற்பனை அதிகரிப்பதானால் அதற்குகேற்ப நாடுபூராகவும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு சாதாரண விலையில் தேவைக்கு ஏற்ப அத்தியாசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.

பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை
படிக்க 0 நிமிடங்கள்