ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை மற்றும் பேலியகொட பகுதியில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.