பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ப்ரக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் நாளையதினம் தீர்மானமிக்க வாக்குபதிவொன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் தெரேஷா மே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடதீர்மானித்துள்ளமை விசேட அவதானத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை திரேஷா மே முன்வைத்த ப்ரக்சிட் ஒப்பந்த்திற்கு ஐரோப்பிய சங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.