வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். தெனியாய – எனசல்வத்த பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின், மேலதிக சிகிச்சைகளுக்கென மாத்தறை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், தெனியாய பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.