ஐஸ் போதைப்பொருளுடன் மருதானை அபேசிங்ஹாராம பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கொழும்பு மத்திய பிராந்திய சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 109 கிராம் 760 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மோட்டார் வண்டியொன்றில் பயணித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.