சீனாவில் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது 31 இணையதளங்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சுறுத்தல், அவமதித்தல், அரச செயற்பாடுகளை விமர்சித்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக குறித்த சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இணையதளங்களை பயன்படுத்தி கப்பம் கோரும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.