கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், அதிவணக்கத்துக்குரிய பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 3ம் திகதி அவர் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. அபுதாபி அரசின் முடிக்குரிய மன்னர் மற்றும் கதோலிக்க சமூகத்திடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய அவர் அங்கு செல்லவுள்ளார். இதேவேளை பாப்பரசரின் விஜயமானது வரலாற்று சிறப்புமிக்கதென சர்வதேச ஊடகங்ள் செய்திவெளியிட்டுள்ளன.