கிணற்றிலிருந்து சடலமொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் வவுனியா, ஈச்சங்குளம் தருனிகுளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.40 வயதுடைய செல்வம் எனும் தன்னுடைய மகனை காணவில்லையென அவருடைய தாய் வீட்டில் தேடிப்பார்த்துவிட்டு கிணற்றுக்கடியில் சென்று பார்க்கும் போது கிணற்றினுள் தனது மகனின் சடலம் கிடப்பதை கண்டுள்ளார்.இதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதோடு சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.