வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கென உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமென உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போலந்தின் கிட்டோவைஸ் நகரில் மாநாடு இடம்பெற்றது. வெப்பநிலை அதிகரிப்புக்கு மனிதர்களின் தீர்மானமிக்க ஒரு சில செயற்பாடுகளே காரணமென மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. 2030 ம் ஆண்டளவில் நூற்றுக்கு 45 வீத பாதகமான வாயு வெளியேற்றுகை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் இதன் ஊடாக பூமி அதிக சுற்று சூழல் நெருக்கடிக்கு உள்ளாகுமென உலக நிலை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.