கதுருவெயில் லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றுக்கு போலி நாணயத்தாள்களை வழங்கி லொத்தர் ஒன்றை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மூன்றையும், அச்சு இயந்திரம் ஒன்றும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் வழங்கியது போலி நாணய தாள் என அறிந்து கொண்ட விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
45 வயதுடைய இந்த சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.